தட்டை

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்

அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்

கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

வெண்ணெய் - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

கடலைப்பருப்பை அரை மணி நேரம் நீரில் ஊறவைத்துக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவை கொட்டி அதனுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், கடலைப் பருப்பு, பெருங்காயத்தூள், வெண்ணெய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். அதனை சிறு உருண்டைகளாக்குங்கள். உருண்டைகளை உள்ளங்கையில் வைத்து அழுத்தி மெலிதாக தட்டைபோல் ஆக்கி கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும்.

No comments:

Post a Comment