தேவையான பொருட்கள் :
- முட்டை - 4
- பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன்
- புதினா - சிறிதளவு
- மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
- மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்
- கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
- எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
- கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். ப.மிளகாயை பேஸ்ட் செய்தும் போடலாம்.
- முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து கத்தியால் முட்டையை சற்று கீறி கொள்ளவும். அப்போது தான் மசாலா உள்ளே போகும்.
- அடுப்பில் நான் - ஸ்டிக் பேனை வைத்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பச்சைமிளகாய்/பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும்.
- மிளகாயின் பச்சை வாசனை போனதும் புதினாவைச் சேர்த்து ஒரு பிரட்டு புரட்டவும்.
- இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு மற்றும் மிளகுத்தூளைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கலக்கவும்.
- பொடிகளின் பச்சை வாசனை போனதும் வேக வைத்த முட்டையைச் சேர்த்து கிளறவும்.
- முட்டையில் மசால் ஏறிவிட்டதா என்று உறுதி செய்துவிட்டு அடுப்பை அணைத்து பரிமாறவும்.
- சூப்பரான செட்டிநாடு அவித்த முட்டை பிரை ரெடி.
குறிப்பு :
பச்சைமிளகாயை பேஸ்ட்டாககூட உபயோகிக்கலாம்.